Tuesday, September 21, 2010

வாரத்திற்கு 5 முட்டை

வாரத்திற்கு 5 முட்டை : முதல்வர் கருணாநிதி அறிவிப்பு


அட கஷ்ட்ட காலமே. பாவம் கோழிங்களுக்கு வந்த கஷ்ட காலத்த பாத்தீங்களா? தேர்தல் நெருங்க நெருங்க ஊர்ல இருக்கிற ஆடு, கோழிங்களுகெல்லாம் கெட்டகாலம்தான். ஏ கோழிங்களா இனிமேல் ஒழுங்கா மூடிக்கிட்டு முட்டைய போடுங்க, இனி தி.மு.க காரனுக எல்லாம் கைல ஒரு குச்சிய வெச்சுக்கிட்டு உங்க பின்னாடி உக்காந்து பாத்துக்கிட்டே இருப்பானுக. எப்படியாச்சும் முட்டை, சட்டை ன்னு எதையாச்சும் கொடுத்து ஆட்சிய புடிக்கணும். அதனால நெலமைய தெரிஞ்சு ஒழுங்கா அழகா வெள்ளை வெள்ளையாய் புளுக்... புளுக்... ன்னு முட்டைய போடுங்க பாக்கலாம். இல்லேனா சுளீர்ன்னு பின்னாடி பட்டக்ஸ் மேல ஒன்னு விழும். டேய் சொம்புங்களா, வாங்கடா வாங்க, வந்து அந்த சொம்பை எல்லாம் கலட்டி வெச்சிட்டு ஆளுக்கொரு குச்சிய கைல எடுத்திட்டு போயி கோழி பின்னாடி பாத்துக்கிட்டே திரியுங்க. நமக்கு தேர்தல் ரொம்ப முக்கியம். இப்போ ஜெயிக்கல அப்புறம் நாம எல்லாம் முட்டை போட வேண்டியதாயிடும். ஒடுங்க ஒடுங்க. இளிச்ச வாய் மக்களே, கொஞ்சம் பொறுங்க. தேர்தல் வருதில்ல. இப்போ முட்டை போடுறோம், அப்புறம் மொட்டை போடுறோம், சரியா....

No comments:

Post a Comment